கொழும்பு: பெபிலியான, ‘பெஷன் பக்’ ஆடை விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரவிய திடீர் தீ விபத்தை தொடர்ந்து, நிறுவனத்தின் CCTV தொகுதியை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர். நிருவாகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிஸார் பலவந்தமாக CCTV தொகுதியை எடுத்துச் சென்றதாக ‘பெஷன் பக்’ முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அஸாத் சாலி, மனோ கணேசன், பைசல் முஸ்தபா ஆகியோர் நேரடியாக சம்பவ இடத்துக்கு விஜயம் செய்துள்ளதோடு, தீ பரவல் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரின் கவனத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment