புத்தளம் நாகவில்லு ரசூல் நகரைச் சேர்ந்த அஷ்ஷெய்க் செய்யத் முஹம்மது தமீம் (தீனி) என்பவர் இரு சிறுநீரங்களும் பழுதடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அவதிப்படுகிறார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்காக 10 இலட்சம் ரூபா தேவைப்படும் எனவும் இவரைப் பரிசோதனை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு திகதி வழங்கப்பட்டுள்ளமையினால் ஏழ்மை நிலையிலுள்ள இவரால் குறித்த நிதியை திரட்ட முடியாது நல்லுள்ளம் கொண்டவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றார்.
எனவே, இவரின் சத்திர சிகிச்சைக்காக நிதி உதவி செய்ய விரும்புவோர் எம்.எஸ்.தமீம், கணக்கிலக்கம்: 166200110019006 மக்கள் வங்கி எனும் கணக்கிலக்கத்தில் வைப்பிலிட முடியும். மேலதிக விபரங்களுக்கு 0713866500, 0718603256 எனு; இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
– ஆர்.ரஸ்மின்

Leave a comment