முஸ்லிம்களின் திருமண சட்டத்தை மாற்றினால் தான் GSP + என்று சொல்லும் ஐரோப்பிய அரசு மலையக மக்களுக்கு 1000 ரூபா கொடுக்கவேண்டும் மற்றும் வீடு கல்வி போன்ற வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்றும் அப்படி கொடுக்காவிட்டால் GSP + தருவதில் சிக்கல் உண்டு என்று ஏன் சொல்லவில்லை?
இந்த கேள்வியை முன்வைக்கிறார் இலங்கையில் பிறந்து ஜெர்மனி இல் 33 வருடமாக வ சிப்பவரும்,ஜெர்மனிய Kassel மாநகரத்தின் மாநகரசபை The foreigners’ advisory council அங்கத்தவரும் ஆகிய திரு.அனஸ்லி ரட்ணசிங்கம் …
இன்று 250 வருடங்களுக்கு முன் பிரித்தானிய அரசால் குடியேற்றப்பட்டு இன்றுவரை மிகவும் மனிதாபிமானம் இல்லாத திணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் பல லட்ஷம் மக்களை கண்டு கொள்ளாத ஐரோப்பிய அரசு.
Annesley Ratnasingham
திரு.Sajjad Haider Karim ( UK ),திருமதி.Jean Lambert (UK ) ஆகிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்திருக்க வேண்டியது பிரித்தானியர்களால் அடிமை படுத்தப்பட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை முதலில் விடுவிக்க வேண்டும் என்பதே….
தங்கள் மனித உரிமை வீரர்கள் என்று காட்டமுஸ்லீம் மக்களின் உள்ளக பிரச்னையை கையில் எடுக்கும் இந்த மனித உரிமை முகமூடி போட்ட வெள்ளையர்கள மலையக மக்களின் பிரச்சனை ஒரு மனித உரிமை மீறல் ஆக தெரியவில்லையா???
மலையக மக்களை மனிதர்களாக ஆவது தெரிகிறதா ??சம்பளத்தை உயர்த்தினால் தேநீரின் விலை உயர்ந்துவிடும் என்பதில் இருக்கும் கவனம் இரத்தம் சிந்தி 250 வருடமாக வாழும் மக்களில் இல்லையா?
Leave a comment