கொழும்பு: ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் வரியை நீக்குவது தொடர்பில், நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோத்தவில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்படும் என தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார்.

Leave a comment