கொழும்பு: அவன்கார்ட் வியாபாரத்துக்கு அனுமதி வழங்கியது தாமே என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பணை விடுத்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு மஹிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பல கோடி ரூபாய் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கைகளும் இதுவரை நல்லாட்சி எடுக்கவில்லை. எனினும், யுத்தத்தை நிறைவு செய்த பின்னரும் இராணுவத்தினருடன் இணைந்து நாட்டுக்கு சேவையாற்றிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றது.
இதேவேளை, நாட்டுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டித் தந்தது அவன்கார்ட் நிறுவனமே என பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்திருந்தார்.
Published by


Leave a comment