கொழும்பு புகையிரதத்தில் கதவைத் திறக்காத நெதர்லாந்தின் இளம் தம்பதிகள்!

trainகொழும்பு: நெதர்லாந்தின் இளம் தம்பதிகள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் வகுப்பு டிக்கட்டுடன், முதலாம் வகுப்பில் பயணம் செய்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முதலாம் வகுப்பு சொகுசு உறங்கும் அறையை கொண்ட இவர்களை பொலிஸார் பல முறை முயற்சித்தும் கூட அறையை திறக்காதமையால் புகையிரதம் தாதமானது. இந்த நிலையிலேயே குறித்த தம்பதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

train

Published by

Leave a comment