கொழும்பு: நாடளாவிய ரீதியில் 15,000 கல்விசாரா ஊழியர்கள் கடமை புரிவதாகவும் கல்விசாராஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித்.கே.திலகரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் சேவைபுரியும் கல்விசாரா ஊழியர்களில் நூறில் பத்து வீதமானோர்பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களாலோ பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக கல்வி சாரா ஊழியர் சங்கம்தெரிவித்துள்ளது.
கல்விசாரா ஊழியர்கள் குறித்த சம்பவங்கள் தொடர்பில் முறையிட்டால் அவர்களதுசம்பளங்கள் குறைக்கப்படுவதோடு, அவர்கள் தூர இடங்களுக்கு மாற்றலாகிஅனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மருதானையில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் வடமேல் மாகாணம் வெளிஓய, மொனராகல, பதுளை ஆகிய பிரதேசங்களில்அதிகம் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Published by


Leave a comment