காத்தான்குடி வாவிக்கரையினை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்

  • எம். எச். எம். அன்வர்

nazeer hafizகாத்தான்குடி: காத்தான்குடி (மட்டு) வாவிக்கரையினை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நேற்று (12) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பி எஸ் டீ ஜீ திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ள இவ் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ எல் எம் என் முபீன்,  நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன், முன்னாள் நகர முதல்வர் மர்சூக் அகமட் லெவ்வை, இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அகமட் லெவ்வை மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பெண்களுக்காக அமைக்கப்படவுள்ள இத்திட்டத்தில் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டன.

nazeer hafiz

shibly nazeer mubeen

Published by

Leave a comment