பல்லேகல மைதானத்தினுள் நிர்வானமாக நுழைந்த இரசிகர்

cricket nake aus v sl 2016பல்லேகல: நேற்று (26) இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் முதலாவது டெஸ்ட் போட்டியானது கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. இந்நிலையில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் தன்னுடைய ஆடைகள் முழுதையும் கலைந்து விட்டு மைதானத்திற்குள் நிர்வானமாக உள்நுழைந்துள்ளார். மழை காரணமாக போட்டியானது இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த நபர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

எனினும் பொலிஸார் தலையிட்டு அவரை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் வர்ணத்தை முகத்தில் பூசியுள்ள இந்நபர் அவுஸ்திரேலியராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

cricket nake aus v sl 2016

Published by

Leave a comment