அறிவிலிகளின் கைகளில் மாட்டிக்கொண்ட முகநூல்..

  • இர்ஷாட் ஏ.காதர்

Donkey[1]காத்தான்குடி: நோன்பு பிறையுடன் ஆரம்பமாகும் முகநூல் அறிவிலிகளின் ஸ்டேடஸ்கள் அவர்களையும் அடையாளப்படுத்தி, ஊரையும் அவமானப்படுத்திச் சென்றுகொண்டிருக்கின்றன. மார்க்க அறிஞர்கள் எனக் கூறிக்கொள்வோரையும், சகோதரர்களையும் துண்டாட உருவாக்கப்பட்ட முகநூலின் நோக்கங்களிள் ஒன்று கச்சிதமாக வெற்றியடைந்திருக்கிறது.

இந்த முகநூல் வந்த பின்னர்தான், ஐ.எஸ் தீவிரவாதமும் உலகம் முழுக்கப் பரவி, முஸ்லிம்களின் உயிர்களையும், மானத்தையும் குடித்துக்கொண்டிருக்கின்றது.

இதேபோல்தான் எமது ஊர் அறிவிலிகளின் செயற்பாடுகளும் முகநூலில் துர்நாற்றத்தை வீசிக்கொண்டிருக்கின்றன.

ஆயுதக் கலாசாரம் இருந்திருந்தால் காத்தான்குடி ஃபலூஜாவாகவும், மொசூலாகவும் இப்போது மாறி இருக்கும்.

Donkey[1]
https://yourkattankudy.com/2016/07/21/facebook-donkeys/

தான் பிடித்த முயலுக்கு 3 கால் என வாதிடும் உலமாக்களும், அவர்களின் வால்களும், தங்களது கருத்துக்களை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முன்வருவதில்லை.

“தான் கக்கூசுக்குப் போகிறேன்” என ஒருவர் ஸ்டேடஸ் போட்டால் கண்களை மூடிக்கொண்டு லைக்ஸ் விடும் 50 பேராவது ஒரு அறிவிலிக்கு இருக்கத்தான் செய்கின்றனர்.

“நான் 304 விளையாடுகிறேன்” என்று ஸ்டேடஸ் போட்டால், 70 லைக்ஸ் விழுகுது.

“நான் படம் பார்க்கிறேன்” என்று போட்டால், குறைந்தது 100 லைக்காவது விழுகுது.

“ஐரோப்பாவில் இருந்து உழைக்கும் பணம் ஹராம்” என ஒரு உலமா கூறி இருக்கு. அதுக்கும் லைக்ஸ்;.

அப்போ, இலங்கை அரசாங்கத் தொழில்புரிவோரின் பணம் மட்டும் என்ன ஹலாலா….?

“கலால் வரி” மூலம் பெறப்படும் அதிக வருமானமும் அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் பங்கு வகிக்கிறது.

ஒருவரின் மானத்தையும், மரியாதையையும், குடும்ப மானத்தையும் சிதைத்து நாசமாகிச் சீரழிய உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளத்தில் காத்தான்குடி மானம் மட்டும் உயரப் பறந்துகொண்டிருக்கிறது.

எனவே, அறிவிலிகளாக இருப்போர் முகநூலில் இருந்து ஒதிங்கிக் கொள்வதும், தங்களது குழந்தைகளைப் படிப்பித்து, தாங்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாக மாறவேண்டும் என கேட்கின்றேன்.

Published by

Leave a comment