லாஹூர்: பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மொடல் அழகி கந்தீல் பலூச், கெளரவ கொலைகளின் வெளிப்பாடாக, தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் தைரியமாக தனது புகைப்படங்களை பதிந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச்.சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வந்தார்.
தன்னை தற்கால நவீன பெண்ணியவாதியாக வர்ணித்துக் கொண்ட கந்தீல் பலூச், பாகிஸ்தானில் முக்கிய மதகுருக்களில் ஒருவரான முஃப்தி குவாவி உடன் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியானதை தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.
Published by



Leave a comment