இந்தக் கலாநிதி ஏன் இப்படி இருக்கிறார் பகுதி 02

ashrof“அறியாமைக்கு மறு பெயர் அஹ்மத் அஷ்ரப்” எனச் சொல்லுமளவிற்கு கலாநிதி அஹ்மத் அஷ்ரபின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்திருப்பதை அனைவரும் நன்கறிவோம். கலாநிதி அஹ்மத் அஷ்ரப் தனது முகநூல் பக்கத்தில் எழுதும் வாசகங்களையும், முட்டாள்தனமாக கருத்துக்களையும் உற்று நோக்கும் எவரும் இலகுவில் கலாநிதியின் தராதரத்தை எடை போட்டு விடுவார்.

தனது முகநூலில் தான் செய்யும் அறிவீனமான‌ விமர்சனத்தைப் பார்த்து விட்டு பொது மக்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” எனும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இஷ்டத்திற்கு வார்த்தை ஜாலங்களை முன்வைத்து விழையாடி வருகிறார். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தையும், அதன் பிரச்சாரகர்களையும் அர்த்தமற்ற வகையில் விமர்சிக்கும் முதல் நபராக இந்தக் கலாநிதியே திகழுகிறார். கடந்த பதிவில் கலாநிதியின் அறிவீனமான‌ இரண்டு விமர்சனங்களைப் பார்வையிட்டோம். இம்முறை இன்னும் சில விமர்சனங்களைப் பார்வையிடுவோம்.

03. வீதிகளில் ஒழுங்கு செய்யும் மார்க்க சொற்பொழிவுகளை “சந்தியில் கத்துதல்” என நையாண்டி செய்தல்.
மக்கள் ஒன்று சேரும் இடங்களில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வது அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும் என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். “இஸ்லாத்தை தெருவில் நின்று சொல்லக் கூடாது” என்று அல்லாஹ்வோ அவனது தூதரோ தடுக்கவில்லை. மாறாக‌ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தைகளிலும் தெருக்களிலும், மலை உச்சியிலும் நின்று அழைப்புப் பணி செய்துள்ளார்கள். உலகாதாயங்களை எதிர்பார்க்காமல் இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்கின்ற இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு இடம் ஒரு பிரச்சனையே அல்ல. எங்கு சொன்னால் மக்கள் அதிக பயனடைவார்களோ அங்கு சொன்னால் போதுமானது. இந்த சாதாரண பேருண்மை மெத்தப் படித்த மேதாவியாக தன்னை அடையாளப்படுத்தும் இந்தக் கலாநிதிக்குத் தெரியவில்லை பாருங்கள்!

ashrof

பாடசாலைக் கல்வியை பாதியில் நிறுத்திக் கொண்ட பாமரனுக்கு விளங்கும் சாதாரண‌ எளிய உண்மையைக் கூட சரியாகப் புரிந்து கொள்ள முடியாத இந்தக் கலாநிதி ஹதீஸ்கலையின் நுணுக்கமான கோட்பாடுகளை எங்கே புரியப் போகிறார்?

வீதியில் மேடை அமைத்து மார்க்கப் பிரச்சாரம் செய்வதை விமர்சிக்கும் இவர் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் உள்ள மேடையில் உரையாற்றினார் என்பது ஊருக்கே தெரிந்த உண்மையாகும். இப்போது நாம் இவரிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்டப மேடையில் உரையாற்றினார்களா?” என‌ திருப்பிக் கேட்டால் இவரால் முழிக்கத்தான் முடியும். பதில் சொல்லவோ ஆதாரத்தை எடுத்துக் காட்டவோ முடியாது.

அனைவருக்கும் புரியும் வண்ணம் தெள்ளத் தெளிவாக இருக்கும் எளிய உண்மையைக் கூட இவருக்கு உதாரணம் காட்டி விளக்க வேண்டியுள்ளது என்றால் இவரின் விளங்கும் திறன் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

இன்னும் சொல்லப்போனால் “வீதியில் மேடை போட்டு மார்க்கப் பிரச்சாரம் செய்வது தவறில்லை” என்பது எம்மை விட இவருக்கு நன்கு தெரியும். தனக்கு அவ்வாறு பிரச்சாரம் செய்ய மேடை எதுவும் கிடைக்கவில்லை என்பதால்தான் இவர் எம்மை விமர்சனம் செய்கிறார். கலாநிதியை அவ்வப்போது தேவைக்குப் பயன்படுத்தும் குல்லிய்யதுல் மனார் நிருவாகத்தினர் கூட, கலாநிதி எதை எப்போது எப்படி உளறுவார் என்பது தெரியாததால் அவரை நம்பி மேடை அமைத்துக் கொடுக்கமாட்டார்கள். “வெளிநாட்டில் பல வருடங்கள் ஓதிய தனக்குக் கிடைக்காத மேடை, உள்நாட்டில் ஓதிப் படித்த இளைஞர்களுக்குக் கிடைத்து விடுகின்றதே..!” எனும் மன ஆதங்கம் தான் கலாநிதி கண்ணா பிண்ணா என்று எம்மை விமர்சிக்கக் காரணமாகும். “தனக்குக் கிடைக்காதது பிறருக்கும் கிடைக்கக் கூடாது” என எண்ணும் கேடு கெட்ட சிந்தனை இந்தக் கலாநிதியிடம் உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

04. கெளரமானவர்களை, சந்திகளில் விமர்சிப்பதின் மூலம் தனக்கு ” சமூகப் பெறுமானத்தை”ப் பெறலாம் என NTJ கருதுவதாக அஹ்மத் அஷ்ரப் குற்றம் சாட்டுதல்.

மார்க்கத்தின் பெயராலும், சமுதாயத்தின் பெயராலும் அயோக்கியத்தனம் செய்பவர்களை நாம் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறோம். அதில் கெளரவமானவன் கெளரவம் இல்லாதவன் என்றெல்லாம் நாம் பார்ப்பதில்லை. “நீதியை நிலை நாட்ட வேண்டும்” எனும் சிந்தனையை யாரெல்லாம் நெஞ்சில் சுமந்துள்ளார்களோ அவர்கள் விமர்சனத்தில் பாரபட்சம் காட்டமாட்டார்கள். இதுதான் மார்க்கம் சொல்லும் தெளிவான வழிமுறையாகும்.

நாம் யாரையும் அநியாயமாக விமர்சிக்கவில்லை. காரண காரியத்துடன் விமர்சித்துள்ளோம். அத்துடன் நமது விமர்சனத்தில் எந்த உள்நோக்கமும் கிடையாது. “இப்படி விமர்சித்தால் இது கிடைக்கும்”, “அப்படி விமர்சித்தால் அது கிடைக்கும்” என்றெல்லாம் கணக்குப் போட்டு யாரையும் எதையும் நாம் விமர்சித்ததில்லை. அல்லாஹ் உள்ளங்களை நன்கறிந்தவன். எம்மைப் பொருத்தமட்டில் அநியாயத்தின் வீரியத்தைத்தான் பார்க்கிறோமே ஒழிய அநியாயத்தை அரங்கேற்றிய நபரின் பெருமானத்தை நாம் பார்ப்பதில்லை.

“சமூகத்தில் கெளரவமானவர்களை விமர்சிக்கக் கூடாது” எனும் கொள்கையில் இந்தக் கலாநிதி உறுதியாக இருந்திருந்தால் கடந்த காலங்களில் இவர் மெளலவி அப்துர் ரஊபை விமர்சித்திருக்கக் கூடாது.

ஏனெனில் அவரும் அவருடைய சமூகத்தில் கண்ணியமானவர் தான். அதே போன்று கூறு கெட்ட இந்தக் கலாநிதி அவ்வப்போது சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை “மகிந்தவின் வீட்டுப் பிள்ளை” என்று விமர்சித்து வந்தது அனைவரும் அறிந்ததே! சகோதரர் ஹிஸ்புல்லாஹ் என்பவர் அவரை மதிக்கும் சமூகத்தில் அவர் கெளரவமானவர்தான்.

கெளரவமான ஒரு அரசியல்வாதியை இப்படி விமர்சிக்கலாமா? சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை இந்தக் கலாநிதி விமர்சித்ததன் மூலம் அவர் எதிர்பார்க்கும் சமூகப் பெருமானம்தான் என்ன? என்று நாங்களும் கேள்வி கேட்கலாமே?
ஒரு விடயத்தைப் பேசுவதற்கு முன் பல தடவை யோசிக்க வேண்டும். “யாரையும், எதையும் விமர்சிக்கக் கூடாது” எனும் கொள்கை மார்க்கமாக இருந்திருந்தால் இஸ்லாத்தில் நீதியை வாழ வைக்க முடியாது. எமது விமர்சனத்தில் “அநீதி” இருந்தால் அதை கலாநிதி சுட்டிக்காட்டட்டும். அதை நாம் பரிசீலிக்கத் தயாராகவுள்ளோம். அதை விட்டு விட்டு “சாதாரணமானவனை விமர்சிக்கலாம், கெளரவமானவனை விமர்சிக்கக் கூடாது” என்று பாரபட்ச விமர்சன வேதாந்தம் பேசுவது நியாயமான போக்கல்ல. “தேசிய தவ்ஹீத் ஜமாஅத், கெளரவமானவர்களை மேடை போட்டு விமர்சிக்கிறது” என்று கலாநிதி ஏன் சொல்கிறார் என்றால் அவரையும் கடந்த சில மேடைகளில் நாம் விமர்சித்துள்ளோம். அதற்கு அவரால் மேடை போட்டு பதில் சொல்ல முடியாது. அந்த வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ளவே விமர்சனத்தில் “கெளரவம் அகெளரவம்” என்ற வேறுபாட்டை கையில் எடுத்துள்ளார்.

05. சஹ்ரானை வளர்த்து விட்டதில் PMGG க்கு , மிக முக்கிய பங்களிப்பு உண்டு

“ஸஹ்றானை யாரும் கணக்கெடுப்பதில்லை” என அவ்வப்போது ஒப்பாரி வைக்கும் இந்தக் கலாநிதி இப்போது “நாம் வளர்ச்சியடைந்திருப்பதாக” ஒப்புக் கொள்கிறார். இவ்வாறே நாள் செல்லச் செல்ல அவர் விமர்சிக்கும் பல விடயங்களை அவரே ஒப்புக் கொள்வார் என நாம் நல்லெண்ணம் வைப்போம். ஒருவர் மீது குற்றச்சாட்டைச் சொல்வதாயின் அதற்கான ஆதாரத்தையும் முறையாக ஒப்புவிக்க வேண்டுமெனும் சாதாரண அடிப்படைக் கூட இந்த ஏடு சுமந்த கலாநிதிக்குத் தெரியவில்லை. “சஹ்ரானை வளர்த்து விட்டதில் PMGG க்கு , மிக முக்கிய பங்களிப்பு உண்டு” என்று அவர் சொல்வதாயின் அதற்கான ஆதாரத்தை அவர் முன்வைக்க வேண்டும். கடந்த காலத்தில் ஊகத்தின் அடிப்படையில் ஆதாரமில்லாமல் அஹ்மத் அஷ்ரப் உளறிக் கொட்டிய பல விடயங்களுக்கு நாம் தகுந்த மறுப்பைச் சொல்லியுள்ளோம். மறுப்பைச் சொன்னால் கள்ள மெளனம் சாதிப்பதும், விவாதிக்க அழைத்தால் கல்லில் மலம் கழித்த‌ பூனை போன்று முழிப்பதும் கலாநிதிக்கு வாடிக்கையான விடயமாகும்.

எமது பிரச்சாரப் பயணத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எந்தப் பங்களிப்பையும் செய்ததில்லை. ஒரு போதும் அவர்கள் எம்மை அழைத்து “இப்படி தஃவா செய்யுங்கள்!, அப்படி தஃவா செய்யுங்கள்” என்று ஆலோசனைக் கூட்டம் நடாத்தியதில்லை. தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தை ஸ்தாபித்த ஆரம்ப காலங்களில் காவல் துறையால் ஏற்பட்ட நெருக்குவாரங்களை தீர்த்து வைப்பதில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். அதில் ஒரு வீதம் கூட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் செய்ததில்லை. அவ்வப்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் செய்த மார்க்க விரோதங்களை நாம் தயவு தாட்சண்யமின்றிக் கண்டித்துள்ளோம்.

உண்மை இவ்வாறிருக்க விவரங்கெட்ட இந்தக் கலாநிதி ஏதேதோ உளறி தனது அறியாமையை வெளிக்காட்டியுள்ளார். நல்லாட்சிக்கான‌ மக்கள் இயக்கம் எமது அமைப்பையோ, எமது அமைப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையோ கட்டுப்படுத்துவதில்லை. இரண்டும் தனித்தனியாக இயங்கும் சுயாதீனமான அமைப்பாகும்.

எம்முடைய‌ வளர்ச்சியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கிய பங்களிப்பு இருக்குமானால் அதை இந்த மேதாவி அஹ்மத் அஷ்ரப் ஆதாரங்களுடன் விபரிக்க வேண்டும். விபரிப்பாரா? விழி பிதுங்குவாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

-மெளலவி ஸஹ்றான் (மஸ்ஊதி)
அழைப்பாளர், தேசிய தவ்ஹீத் ஜமாஅத், இலங்கை
11.07.2016

Published by

Leave a comment