காத்தான்குடி: ஓட்டமாவடி அல் கிம்மா நிருவனத்தின் அனுசரனையில் ஸாஜில் மீடியா நெட்வேர்க் இணைந்து வழங்கிய ‘ஈதுன் ஸயீத்’ மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி (08) வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் கடற்கரை திடலில் இடம் பெற்றது. இந் நிகழ்வு சரியாக மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணி வரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வித்தியாசமான பல சிறப்பு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், சிறியவர் மற்றும் பெரியவர் என அனைவரையும் கவரக்கூடிய வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளாக மேடையில் இடம் பெற்றன.
நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்களும், தோல்வியுற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொணடமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி நிகழ்ச்சிகளை ஸாஜில் மீடியா அறிவிப்பாளர் சகோதரர் நஜிம் மற்றும் சுஜா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது.
ஊடகப்பிரிவு,தாருல் அதர் அத்தஅவிய்யா, காத்தான்குடி
Published by


Leave a comment