எமது பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறிக் கொண்டு இவ் வேண்டுகோளை முன் வைக்கின்றோம். கடந்த பல வருடங்களாக எமது பள்ளி வாசல் மூலம் கூட்டு ஸகாத் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இம்முறை வழமையை விட கூடுதலான ஸகாத் நிதியை சேகரித்து அதனை பகிர்ந்தளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு நாம் தள்ளப் பட்டுள்ளோம்.
வறுமையால் வாடுபவர்கள் சிலர். அதற்கு மேலதிகமாக இம்முறை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி ஸகாத் பெறத் தகுதியானோர் பலர்.
இம் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது எமது பள்ளிவாசலின் கடமை என்ற அடிப்படையில் எமது ஸகாத் குழு தேவையான நிதியை சேகரிக்க உங்கள் உதவியை நாடுகின்றது.
நீங்கள் உங்கள் ஸகாத் நிதியிலிருந்து வழங்கும் ஒவ்வொரு ரூபாவும் இன்ஷா அல்லாஹ் மிகக் கவனமாகப் பேணப்பட்டு தகுதியானவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்பதற்கு எமது குழு உத்தரவாதம் அளிக்கின்றது.
எனவே தயவு செய்து எமது பள்ளிவாசல் நிருவாகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாழ்கின்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களினதும் வறுமையால் வாடுகின்ற மக்களினதும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் ஸகாத்தில் ஒரு சிறு பகுதியையேனும் தந்துதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அல்லாஹ் நம் அனைவரின் நற்காரியங்களையும் அங்கீகரிப்பானாக.
தொடர்புகளுக்கு
Mr.Fiyas 077-2482594
Al-Haj Faisal 077-9596155
Al-Haj Husain Siraj 071-6407254Bank Detail:
Raxapana Jummaa Mosque
People’s Bank
Malwana Branch
A/c No 191100104688107
Swift Code -PSBKLKLX
Published by


Leave a comment