கொழும்பு: அம்பாறையில் நடைபெற்றுவரும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைக் காண நாடு முழுவதிலும் இருந்து பெருந்தொகையான மாணவர்கள் நேற்று வருகை தந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியே பெரும்பாலான மாணவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
நேற்று தமிழ்- முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் பெரும் எண்ணிக்கையினர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
– அரசாங்க தகவல் திணைக்களம்
![muslim-students-1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/muslim-students-11.jpg?w=475&h=304)
Leave a comment