முஸ்லிம் மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அழைப்பு
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைப் பார்வையிட அச்சமின்றி வருமாறு முஸ்லிம் மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அழைப்பு விடுத் துள்ளார்.
கண்காட்சிக்கு வரும் சகல மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அறிக் கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அம்பாறையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட தினமும் பெருமளவு மக்கள் வருகை தருகின்றனர். இங்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட செல்லும் முஸ்லிம்களை சிலர் அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தேசத்துக்கு மகுடம் கண்காட்சி பூமியில் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமின்றி கண்காட்சியை பார்வையிட வருமாறும் அவர் பொது மக்களை கோரியுள்ளார். பயமுறுத்தல்களுக்கும் பொய் பிரசாரங்களுக்கும் அஞ்ச வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-தினகரன்
Leave a comment