-பஹ்மியூஸூப்
திருகோணமலை: சம்பூர், நவரட்ணபுரம் மற்றும் கூனதீவு ஆகிய பகுதிகளில் 139 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 25.03.2013 திங்கட்கிழமை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதாக 224வது படைபிரிவு தெரிவித்துள்ளது.
இன்று மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பூர் ‘ பத்திரகாளி அம்மன் கோவிலும் மக்கள் பாவனைக்கு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் பூஜை இன்று காலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




Leave a comment