‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்பில்

Kattankudy Media Forum
Kattankudy Media Forum

– காத்தான்குடி மீடியா போரம்

 ‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு கொழும்பில்  நாளை நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாளை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு – 10 டி.ஆர். விஜயவர்த்தன மாவத்தையிலுள்ள முஸ்லிம் பெண்கள் கல்வி வட்டத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். அரபாத் கரீம் (நளீமி) சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்த நூல் அறிமுகத்தினை சட்டத்தரணி எஸ்.என்.எம்.மர்சூம் மௌலான மேற்கொள்ளவுள்ளதுடன் முதற்பிரதி புரவலர் ஹாஷிம் உமருக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த வெளியீடுகளின் மூலம் கிடைக்கும் நிதி றிஸானா நபீக்கின் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளிடப்பட்ட இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 1ஆம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்றது.

Published by

Leave a comment