
பழுலுல்லாஹ் பர்ஹான்
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச பொது சுகாதார மருத்துவ மாதுகளுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு மகளிர் அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு சிரமதான பணிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் JP, காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான MSM. ஸியாத், சல்மா அமீர் ஹம்ஸா, கிழக்கு மண் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் TL. ஜவ்பர்கான், அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் ஆலோசகர் HMM. அமீர் அலி ஆசிரியர் ஆகியோர் உரையாற்றியதுடன் உலமாக்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி மாதர் சங்கங்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றன.
Leave a comment