– அப்துல் நாஸர்

தாருல் ஹதீத் இஸ்லாமிய கல்வி மையத்தின் ஏற்பாட்டில் மீனவர்களுக்கான 3 மாத இஸ்லாமிய கற்கை நெறியின் இறுதி நாள் அமர்வும் பரிசளிப்பு விழாவும் 14-03-2013 இன்று இஷாத் தொழுகையின் பின் ஹூஸைனிய்யா கிட்ஸ் கல்லூரியில் தாருல் ஹதீத் நிறுவனத்தின் பொறுப்பாளர் மௌலவி MACA. நாஸர் ஜமாலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்புப் பேச்சாளராக அல்மனார் அறிவியற் கல்லூரியின் அதிபரும், தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவருமான மௌலவி SLM. நஷ்மல் பலாஹி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இப்பயிற்சி நெறியில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



Leave a comment