மட்டு கல்லடி புதிய பாலம் எதிர்வரும் 22ம் திகதி மக்கள் பாவனைக்காக

BY: FM. Farhan
BY: FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லடி புதிய பால நிர்மாண வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்ற அதேவேளை குறித்த புதிய பாலம் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இம்மாதம் 22ம் திகதி உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

பல வருடங்கள் பழைமை வாய்ந்த மட்டக்களப்பில் அமைந்துள்ள இப்பாலம் பல்வேரு போக்குவரத்து சாலைகளுக்கு பிரதான பாலமாக திகழ்கின்றது.

இப்பால நிர்மாண வேலைகள் இடம்பெற்று வந்த நிலையில் திடீரென இடைநிறுத்தப்பட்டிருந்து மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது அதிவேக துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment