வடக்கு கிழக்கிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் நியமனம்

slfpவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் வெற்றிடத்தை நிரப்ப கட்சி தலைமையகம் தீர்மானித்துள்ளது.

 இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து அமைப்பாளர்களுக்கான விண்ணப்பங்களை கட்சி தலைமையகம் கோரியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கும் யாழ். தேர்தல் தொகுதிக்கும், காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி கோப்பாய் தேர்தல் தொகுதி, மானிப்பாய் தேர்தல் தொகுதி, நல்லூர் தேர்தல் தொகுதி பருத்தித்துறை தேர்தல் தொகுதி உடுப்பிட்டி தேர்தல் தொகுதி, வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி என்பவற்றுக்கும்,

மன்னார் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளுக்கும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தேர்தல் தொகுதி என்பவற்றுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அமைப்பாளர்கள் பதவிக்குவிண்ணப்பிக்க விரும்புபவர்கள், செயலாளர் நாயகம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல.307 ரீ.பி.ஜாயா மாவத்தை கொழும்பு – 10 என்ற முகவரிக்கு 2013-03-15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விண்ணப்ப படிவம் அனுப்பப்படும் போது கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் தேர்தல் தொகுதியின் பெயர் குறிப்பிடப்படல் வேண்டும். என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment