-OIT
வரும் மார்ச் 5ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவது என்று இன்று சென்னையில் நடந்த டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் டெசோ ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை துவங்கியது. திமுக பொருளாளர் முக ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன், திக தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டெசோ அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வரும் மார்ச் 5ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
Leave a comment