– பழுளுல்லாஹ் பர்ஹான்

அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பகுதி நேர ஹிப்ழ்ப்பிரிவுக்கான அறிமுக விழாவும் சவூதி அரேபிய தனவந்தர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பெறுமதியான 75 ஜூப்பாக்ள் வழங்கும் நிகழ்வும் இன்று அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி பள்ளிவாயலில் கல்லூரி பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிதாஉல் கைர் நிறுவனத்தின் தலைவரும் பொதுநலன் விரும்பியுமான அபூ ஸாலிஹ் ஹாலித்தாவூத் கலந்து கொண்டதுடன் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஹஸனுஷ்ஸெய்க், அஷ்-ஷெய்க் நாயிப், ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி அதிபர் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் (றஹ்மானி),உள்ளிட்டவர்கள் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டதோடு, காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி விரிவுரையாளர் ளபர் பின் அஜ்வாத் (மதனி), காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை, அல்-மனார் அறிவியற் கல்லூரி உப அதிபர் அன்வர் (ஆசிரியர்), அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி அறபு மொழி விரிவுரையாளர் பழுளுல்லாஹ் பஹ்ஜான், கல்லூரி உப செயலாளர் கலீல், பகுதிநேர ஹிப்ழ்ப்பிரிவு பொறுப்பாளர் மௌலவி மஸ்ஊத், ஹிறா பௌண்டேஷன் தலைவர் குறைஷ் மற்றும் நிர்வாகிகள், பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பகுதி நேர ஹிப்ழ்ப்பிரிவு மாணவர்களுக்கும் ஷரீஆப்பிரிவு மாணவர்களுக்கும் மொத்தமாக 75 ஜூப்பாக்கள் வழங்கப்பட்டதுடன் பகலுணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment