
எம்.எச்.எம்.அன்வர்
வாமி (WAMI) நிறுவனம் மற்றும் கல்வி அபிவிருத்தி மன்றம் (EDF) இணைந்து 2012ம் ஆண்டில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் 9வது வருட நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 17/02/2013 திகதியன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தினைச்சேர்ந்த 720 மாணவர்களுக்கு சன்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கல்குடா வலய கல்விப்பிரதிப் பணிப்பாளர் திருமதி இளங்கோ மற்றும் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பிரதிநிதிதகளும் கலந்து சிறப்பித்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாணவர் ஒருவருக்கு சான்றிதழ் வழங்குவதை படத்தில் காணலாம்.
Leave a comment