சவூதி அரேபிய இளவரசி புகைப்(பிடிக்கும்)படம்: ரூ.25 கோடி மிரட்டல்

saudiarabia_princess_smoking_002[1]சவுதி அரேபியாவின் இளவரசி பஸ்மா பின்ட் சவுத்பின் அப்துல்லா ஷிஷ் இல் சவுத், அந்நாட்டின் மனித உரிமை பிரசாரகராகவும் உள்ள அவர் தற்போது பிரிட்டனில் உள்ள மேற்கு லண்டனில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரது அதிர்ச்சி தரும் புகைப்படம் ஒன்று இணைய தளத்தில் வெளியானது. அதில் 48 வயதான அவர் மாடர்ன் உடையில் இருந்தபடி சிகரெட் பிடித்தபடி உள்ளார்.

இதை 5 குழந்தைகளின் தாயான அவர் தனது தோழியின் மடிக்கணனியில் பதிவு செய்து வைத்திருந்தார். அதை கணனியில் புகுந்து தகவல்களை திருடும் ஒரு நபர் அந்த புகைப்படத்தை பதிவு செய்து விட்டார்.

saudiarabia_princess_smoking_001[1]இதை இணையதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.25 கோடி கேட்டு மிரட்டி வந்துள்ளார். ஏனெனில் சவுதி அரேபிய கலாசாரத்துக்கெதிராக அந்த புகைப்படம் இருந்தது தான் காரணம்.

இந்நிலையில், திடீரென அந்த புகைப்படத்தை அந்நபர் வெளியிட்டார். இதனால், இளவரசி பஸ்மாவுக்கும், அவரது அரச குடும்பத்துக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

-L/S

Published by

Leave a comment