புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தினைச் சோ்ந்த மூன்று மாணவிகள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானதினை முன்னிட்டு சென்ற ( 12.02.2013 திங்கற்கிழமை ) பாடசாலையின் அதிபர்,ஆசிரியா்கள், மாணவா்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தினைச் சோ்ந்த மாணவிகளான
1) KM-பாத்திமா றிகாஸா.
2) AS- ஸம்றா பர்வீன்.
3) MU-பாத்திமா ஜெஸ்னா. ஆகிய மூன்று மாணவா்களுமே பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.
புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்திலிருந்து முதல் தடவையாக 2011 ம் ஆண்டில் தான் உயர்தரப் பரீட்சைக்காக மாணவா்கள் தோற்றினர் அவா்களில் மாணவி KM-பாத்திமா றிகாஸா அந்த ஆண்டிலேயே பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார்.
இம்முறை (2012) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவா்களுள் MU-பாத்திமா ஜெஸ்னா, AS-பாத்திமா பர்வீன் ஆகிய இருவரும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.




Leave a comment