காத்தான்குடியைச் சேர்ந்த் 08மாதக்குழந்தை டெங்கினால் மரணம்!

– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  காத்தான்குடி அஷ்ஷூஹதா பகுதியைச் சேர்ந்த றிமாஸா ஸீனத்(மாதம் 08) ஆட்கொல்லி டெங்கு நோயினால் இன்று காலை 06.00 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

டெங்கினால் பாதிக்கப்பட்ட குறித்த 08மாத குழந்தை கடந்த இரு நாட்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமையற்தொழிலில் ஈடுபடும் சபூர்தீன் என்பவரின் மகளே இவ்வாறு வபாத்தாகியுள்ளார்.

இவரது ஜனாஸா இன்று காத்தான்குடியில் காலை 10.00மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Published by

Leave a comment