
-ACM. சப்ரி
இலங்கையின் 65 வது தேசிய தின உத்தியோக பூர்வ நிகழ்ச்சி இன்று ( 2013.04.04 ) துபையில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
கௌன்சல் ஜெனரல் MM. அப்துல் றஹீம் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் துபாயில் உள்ள இலங்கையர்கள், பிரமுகர்கள் என அதிகமானவர்கள் கலந்து சிறப்பித்தனர் .
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதப்பெரியார்களின் ஆசியுடன் ஆரம்பமாகிய இன் நிகழ்வில் அப்துல் றஹீம் இலங்கைத் தேசிய கொடியை ஏற்றி பிரதான உரையை ஆற்றினார் .
இலங்கை ஜனாதிபதி, பிரதம மந்திரி, வெளிவிவகார அமைச்சர்களின் செய்திகளும் முறையே ஆங்கிலத்தில், தமிழில், சிங்களத்தில் வாசிக்கப்பட்டன .
துபாய் வாழ் இலங்கையை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் இம் முறை அதிக அளவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






Leave a comment