இந்தியா, டெல்லி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தைப் பார்க்கிலும் விஸ்வரூபம் பெரும் சலசலப்பை இந்தியாவில் தந்பொழுது ஏற்படுத்தியிருக்கின்றது. பெங்களூரில் உள்ள ஊர்வசி தியேட்டரில் விஸ்வரூபத்தை திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ரத்ததானம் செய்து வருகின்றனர்.
பெங்களூர் லால்பாக் ரோட்டில் உள்ள ஊர்வசி தியேட்டரில் நேற்று காலை விஸ்வரூபம் திரையிடப்பட்டது. காலை காட்சி ஓடிக் கொண்டிருக்கையிலேயே மதியக் காட்சிக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி அளவில் பொலீசார் படத்தை ரத்து செய்யுமாறு கூறியதுடன் பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து படம் ரத்து செய்யப்பட்டது. டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று கூறியும் பலர் படத்தை பார்த்தே தீருவோம் என்று கூறி அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் பொலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். படம் இன்று திரையிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நாளை தான் திரையிடப்படும் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் விஸ்வரூபத்தை உடனே திரையிடக் கோரி கமல் ரசிகர்கள் ஊர்வசி தியேட்டர் முன்பு ரத்த தானம் அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் இம்மாத இறுதிக்குள் இப்படத்தின் இறுதித்தீர்ப்புக்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜனி கமலுக்கு ஆதரவுக் கரம் நீட்டி இருப்பதால் மேலும் பல சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.
Leave a comment