சன்டா மரியா : இரவு விடுதி தீ விபத்தில் 245 பேர் பலி

130127113548_brazil_fire_304x171_globo.com[1]பிரசிலின் தென்பகுதி நகரான சன்டா மரியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயில் பெரும்மாலும் மாணவர்கள் உட்பட குறைந்தபட்சம் 245 பேராவது இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

அங்கு ஒரு இசைக்குழு வாணவேடிக்கையை செய்ய ஆரம்பித்ததும், ஞாயிறன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் கட்டிட சுவரின் மேற்பரப்பில் இந்த தீ பற்றிக்கொண்டதாக நேரில் பார்த்தவர்களை ஆதாரம் காட்டி உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.

அங்கு ஒரு இசைக்குழு வாணவேடிக்கையை செய்ய ஆரம்பித்ததும், ஞாயிறன்று அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் கட்டிட சுவரின் மேற்பரப்பில் இந்த தீ பற்றிக்கொண்டதாக நேரில் பார்த்தவர்களை ஆதாரம் காட்டி உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.

அந்த இரவு விடுதிக்கு ஒரேயொரு வாயில் மாத்திரம் இருந்ததாகவும், ஆகவே ஆட்கள் தப்பியோட புறப்பட்டதும், அங்கு பதற்றம் ஏற்பட்டதாகவும் அதில் அகப்பட்டு சிலர் இறந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை, பலர் நச்சுப் புகையை சுவாசித்ததால் இறந்துபோயிருக்கிறார்கள்.

அந்த தீயின் தீவிரம் காரணமாக அந்த கட்டிடம் இடிந்துவிழுந்துவிடும் என்று தீயணைப்பு படையினர் அச்சம் கொண்டிருந்தனர்.

அந்த நகரின் பிணக்கிடங்கில் அவ்வளவு சடலங்களையும் கொண்டு வைக்க முடியாத காரணத்தினால், உள்ளூர் உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் தற்காலிக பிணக்கிடங்கு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

சிலி நாட்டுக்கான தனது விஜயத்தை இடையில் கைவிட்ட பிரசில் நாட்டு அதிபர் டில்மா ரூசெஃப் அவர்கள் இந்த விடயத்தை கையாள்வதற்காக நாடு திரும்பியுள்ளார்.

-BBC/Tamil

Published by

Leave a comment