புதிய காத்தான்குடி மட்/அன்வா் வித்தியாலயத்தில் இம்முறை தரம் ஒன்றுக்கு சுமார் 155 க்கும் மேற்பட்ட மாணவா்கள் அனுமதித்த வரலாற்று நிகழ்வு சென்ற ( 18.01.2013 வெள்ளிக்கிழமை) அதிபர் ஜனாப். ILM. தாஸீம் தலைமையில் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது. புதிய மாணவா்களுக்கு பழைய மாணவா்களால் மலா் கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ அல்ஹாஜ் MI. அப்துல் கபூர் BA (மதனி) ISA (Batticaloa Central Zone) மற்றும் ஆசிரியா்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.







Leave a comment