புதிய காத்தான்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் 2013 தரம் ஒன்றுக்கான புதிய மாணவா்கள் அனுமதியும் வரவேற்பு நிகழ்வு, வித்தியாலயத்தின் அதிபர் யூனுஸ் JP தலைமையில் ( 18.01.2013 வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணியளவில் புதிய பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா் பொறியியளாளர்அல்ஹாஜ். ஷிப்லி பாறுாக் JP, திரு. S.சிறிதரன் (SLEAS) (பிரதிக் கல்விப் பணிப்பாளர்,கல்வி அபிவிருத்தி மட்டக்களப்பு/மத்தி வலயம் ஏறாவூர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அல்ஹாஜ். HMM.பா்க்கீர் BA/JP உட்பட ஏனைய அதிதிகள், ஆசிரியா்கள் பெற்றோர்கள், உலமாக்கள் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் போது புதிய மாணவிகளை பழைய மாணவிகள் மலா் கொடுத்து வர வேற்றனர்.











Leave a comment