பாகிஸ்தானுக்கு ஆக்ரோஷ பதிலடி கொடுங்கள்: இந்திய இராணுவத் தலைவர்

130114071152_bikram_singh_army_chief_304x171_reuters_nocredit[1]தகராற்றுக்குரிய காஷ்மீரில், பாகிஸ்தானிய துருப்பினர் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறு இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.

தூண்டிவிடும் விதமாக செயல்படுவோருக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்தியாவுக்கு இருக்கவே செய்கிறது என்று ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்தார்.

காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பதற்றங்களைத் தணிப்பதற்கும் மேற்கொண்டு மோதல்கள் வராமல் தடுப்பதற்குமான வழிவகைகளை ஆராய்வதற்காக அப்பகுதியிலுள்ள இராணுவத் தளபதிகள் கூடவிருக்கும் நேரத்தில் இராணுவத் தலைவர் பிக்ரம் சிங்கின் கருத்து வந்துள்ளது.

கடந்த வாரம் இப்பகுதியில் நடந்த மோதல்களில் இந்தியச் சிப்பாய்கள் இருவரும் பாகிஸ்தானியச் சிப்பாய்கள் இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை யுத்தமிட்டுள்ளன.

-BBC

Published by

Leave a comment