கடந்த சில நாட்களாக காத்தான்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்ற நிலையில் வீதிகள் பல வெள்ளத்தால் மூழ்கி உள்ளன.
காத்தான்குடியைப் பொறுத்த மட்டில் அதிலும் குறிப்பாக புதிய காத்தான்குடி சிறு மழை பெய்தால் கூட மழை நீர் வழிந்தோடக் கூடிய ஒரு நிலை இல்லாமலேயே உள்ளது.
அந்த வகையில் நீரினை வழிந்தோடச் செய்வதற்காக வேண்டி காத்தான்குடியின் நகர முதல்வர் அல்ஹாஜ். SHM. அஸ்பர்.JP அவர்கள் தனது ஊழியர்களுடன் சிரமதானப் பணியினில் ஈடுபடுவதனைக் காணக்கூடியதாக உள்ளது.






Leave a comment