முன்னாள் காழி நீதிபதியின் அதிகார துஸ்பிரயோகம் காரணமாக காத்தான்குடி காழி நீதி மன்றம் கால வறையரை இன்றி மூடப்பட்டுள்ளதினை அறிவோம்.
அவ்வாறு கால வறையரையின்றி காழி நீதிமன்றம் மூடப்பட்டிருப்பதனால் ஆடு, மாடுகள், நாய்கள் என மிருகங்கள் கட்டிடத்தில் ஓய்வு பெறும் நிலையில், வளாகம் தற்போது தனியார் வாகன தறிப்பிடமாகவும் மாறி வருவதாகவும் பொது மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
எப்போது காழியார் வருவது…? எப்போது காழி நீதி மன்றம் திறப்பது…? என பொது மக்கள் பேசிக் கொள்கின்றனா்.
வாரங்கள் பல சென்று கொண்டிருக்கும் நிலையில் காழி நீதி மன்றம் கட்டடிடம் அதன் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக வேண்டி சுற்றுமதில் அமைப்பது மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
இது விடயத்தில் ஊா் தலைமைத்துவம் அதிலும் குறிப்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

Leave a comment