– பிராந்தியச் செய்தியாளர்
கடந்த வாரத்தில் இருந்த ‘உலகம் அழியும்’ பீதியிலிருந்து மக்கள் விடுபட்டாலும் நாட்டில் பரவலாக அவ்வப்போது பெய்துவரும் வர்ண, மற்றும் ஜீவராசிகள் மழைகளால் மக்கள் தொடர்ந்தும் பீதியில் இருக்கின்றனர்.
அநுராதபுரம், திரிப்பனே, லபுன்னெருவ பகுதியில் இன்று (27) வியாழனன்று காலை 9.30 மணியளவில் மஞ்சள் மழை பெய்துள்ளது.
சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த மஞ்சள் மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் தம்புள்ளை, மெதிரிகிரிய, பதுளை ஆகிய பகுதிகளில் மஞ்சள் மழையும் பொலன்னறுவை, மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் சிவப்பு மழையும் றுஹுணு பல்கலைக்கழகத்தில் மீன் மழையும் திஸ்ஸமகாராமவில் இறால் மழையும் மாத்தறையில் முதலை மழையும் பெய்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment