-எம்.எச்.எம்.அன்வர்
காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினால் சிறுவர் துஷ்பிரயோகத்தினை குறைப்பதற்கான நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சிறுவர் துஷ்பிரயோகத்தினை தடுப்பது தொடர்பான காணொளிகளும் காண்பிக்கப்பட்டதுடன் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் திரு பிரபா, ஜனாப் றபாஸ மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களும்; கலந்துகொண்டனர்.
படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.




Leave a comment