அல்குர்ஆனின் வசனங்களை உணர்ந்து புனித இஸ்லாத்தை தழுவினர் கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் இவர் யூத சமூகத்தைச் சேர்ந்தவராவார்.
மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் இத்தா இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்.
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்) வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன்) (2:228) என்கிறது. ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.
ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே டி. என். ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி. என். ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும். என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு, அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப் போனார். குர்ஆனை ஏற்றார்.
இது தொடர்பாக எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்.
அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கிறான்.
அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டு பிடித்தார். அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆபிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார். அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
இதிலிருந்து மூன்று மாத இத்தா ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி. என். ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன் பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி. என். ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல்,மறுமணம் செய்த பின் பிறக்கும குழந்தையின் டி. என். ஏ. வும் முந்தைய கணவனின் டி. என். ஏ. வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
-தினகரன்
Leave a comment