– Inamullah M
பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான கட்டாய தலைமைத்துவப் பயிற்சி இந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி சுமார் 28 இராணுவ முகாம்களில் ஆரம்பமாகிறது. முதலாவது பிரிவினரது பயிற்சி ஜனவரி மாதம் 12 ஆம் திகதி நிறைவுறும், முஸ்லிம் மாணவ மாணவியர் தமக்குரிய இஸ்லாமிய மரபுரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
கடந்த வருட அனுபவத்தை வைத்து சில அறிவுரைகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்:
1) முஸ்லிம் மாணவியர் வகுப்பு கற்கை நடவடிக்கைகளின் போது ‘அபாயா’ அணிவதாயின் அதனை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் ஒரு சிலர் இணங்குகின்ற பட்சத்தில் எமது உரிமை முழுமையாக அபகரிக்கப்பட்டு விடலாம்.
2) உடற் பயிற்சிகளின் போது ‘அபாயா’ அணிந்துகொண்டு பயிற்சிகள் செய்வது சிரமம் ஆகையால், எல்லா மாணவியரும் வெள்ளை நிற சல்வார் கமீசும் வெள்ளை நிற தலைச் சீலையும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள், வெவ்வேறு கலர்களில் அணிந்தால் ஒரு சீருடை பிரச்சினை தோன்றலாம்.
3) ஆண் பெண் கலப்பு நிகழ்வுகள்:
பயிற்சிகளை சென்ற முறை தவிர்க்க முடியாமல் போனது, ஆனால் முஸ்லிம் ஆண் மாணவர்களும் முஸ்லிம் பெண் மாணவர்களும் விடாப்பிடியாக நின்றால் ஒரு வேளை எமது உரிமையை தக்க வைத்துக் கொள்ளலாம். முஸ்லிம் மாணவியர் தயங்கும் பட்ச்சத்தில் கடந்த முறை முஸ்லிம் ஆண் மாணவர்கள் அடுத்த இன மத மாணவியரோடு தாராளமாக கூட்டு நிகழ்வுகளில் ஆர்வம் காட்டியமை இராணுவ அதிகாரிகளால் சுட்டிக் காட்டப் பட்டமை இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

Leave a comment