BBC
இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் அரசிடம் இல்லை என்று சிறார் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த கொழும்பில் நடந்த பேரணியொன்றில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மலையகம் மற்றும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்கள் வேலைக்காக கொண்டு செல்லப்படுவது தொடர்வதாக சிறார் நலத்துறை துணையமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

Leave a comment