கொழும்பில் ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிரசவம்

MJ

கொழும்பு தனியார் ஆஸ்பத்திரியொன்றில் பெண்மணி ஒருவர் ஒரே சூலில் ஐந்து குழந்தைகளை நேற்று பிரசவித்துள்ளார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

23 வயது நிரம்பிய இந்த இளம் தாய் பிரசவித்திருக்கும் ஐந்து குழந்தைகளில் இரண்டு ஆண்களும், மூன்று பெண்களுமாவர் என்றும் அவ்வட்டாரங்கள் கூறின.

கடந்த மாதம் கண்டி போதனா வைத்தியசாலையில் ஒரு தாய் 5 குழந்தைகள் ஒரே சூலில் பிரசவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment