காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாணி விழா!

– எமது விஷேட நிறுபர்

தமிழ் மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான ‘வாணி விழா’ உலக இந்துக்களால் இன்று கொண்டாடப்படுகிறது.

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் நிலையங்களிலும் பல்லின மக்களின் பாரம்பரியங்கள் மற்றும் பெருநாள் நிகழ்வுகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தவகையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற ‘வாணி விழா’ வில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தவர்கள், இந்துசமய மதகுருமார்கள், பிரமுகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment