5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் காலி ரிச்மன்ட் கல்லூரி மாணவனான கே.எஸ். கொடித்துவக்கு மற்றும் தலாத்து ஓயா கனிஷ்ட பாடசாலை மாணவி ஆர்.எம்.ஏ.யு. மதுவந்தி ஆகியோர் அகில இலங்கை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் தலா 196 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட்ட 2500 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். பரீட்சை பெறுபேறுகளுடன் வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Island Ranks Name School Marks

1

K.S.Kodithuwakku Richmond College Galle

196

1

RMAU Madhuwanthi Thalatuoyo KV

196

3

WMA Adithya Bandara Wickramasinghe Seventh Day Adventist High School Kandana

195

– தகவல்: வீரகேசரி

Published by

Leave a comment