சுவாஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார- வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் கையெழுத்திடப்பட்டது.
இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் சுவாஸிலாந்து சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இம்டிட்டி பகுட்ஸ் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இரு நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
-அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment