லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஆரம்ப வைபவங்களுக்கு முன்னதாகவே கடுமையான பார்வைக் குறைபாட்டை உடைய தென்கொரிய வீரர் ஒருவர் இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
தனி நபர்களுக்கான விற்போட்டியில் உலக சாதனையை ஏற்படுத்திய இம் டொங்- ஹையுன் என்னும் அந்த வீரர் மற்றுமொரு உலக சாதனையை நிகழ்த்திய தென்கொரிய வில்லாளர் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்.
”இம்” அவர்களுக்கு இடது கண்ணில் 10 வீதமான பார்வைத் திறனும், வலது கண்ணில் 20 வீதமான பார்வைத் திறனும் மாத்திரமே உள்ளது.
ஆனால் அவர் கண்ணாடியை அணிய மறுத்துவிட்டார். தனது இலக்கை தான் பார்க்கும் போது அவற்றில் நிற வரிகள் தெளிவற்று தனக்கு தெரிந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
-BBC/Tamil
Leave a comment