அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கையளித்தார்.
களணிப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற இவர் தமது ஆரம்பக் கல்வயை அம்பாறை சதாதிஸ்ஸ மகா வித்தியாலயத்தில் பெற்றார்
பலதுறைகளிலும் உயர் பதவிகளை வகித்துள்ள இவர் தற்போது புத்தசாசன மற்றும் சயம விவவார அமைச்சின் இணைப்புச் செயலாளராப் பணிபுரிந்து வருகிறார்.
-அரச தகவல் ஊடகம்
Leave a comment