மியன்மார் முஸ்லீம்களும் இன்றைய நிலைமைகளும்….

-அஹ்மட்  இஸ்ஸத்

எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த தீவிரவாத இயக்கங்கள் மேற்கொள்ளும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகத்தை தலையிடுமாறு வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் இஹ்வானுல்முஸ்லிமீன் பொதுச்செயளாலர் கலாநிதி மஹ்மூத் ஹூஸைன் கடந்த சில கிழமைகளாக பௌத்த தீவிரவாத குழுக்கள் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் படுகொலைகள், பெண்கள் கற்பழிப்பு, வீடுகளை கொல்லையிடல், உடமைகள் சூறையாடல் போன்ற நிகழ்வுகள் தங்களை மிகவும் கவலைக்குள்ளாக்குவதாக தெரிவித்துள்ளதோடு, மியன்மார் அரசாங்கத்தின் மீது தாக்கம் செலுத்துகின்ற, அனைத்து நாட்டு ஆட்சியாலர்கள், ஐக்கிய நாடுகள் சபை, உலக அனைத்து மனித உரிமை அமைப்புகள், அரபு லீக், சர்வதேச இஸ்லாமிய வாலிபர் இயக்கங்கள் அனைத்தும் இத் தீவிரவாத தாக்குதளை நிறுத்துவதற்கும், மியன்மார் முஸ்லிம்களின் உயிர்களையும்,  உரிமைகளையும் பாதுகாப்பதற்கும் முன் வருமாறு ஹூஸைன் அழைப்பு விடுத்துள்ளார்.

மியன்மார் மனித உரிமை ஆர்வளர் முஹம்மத் நாசர் ‘அராக்கான் மாகண முஸ்லிம்கள் அதிகமான அளவில் கடும்போக்கு பௌத்த தீவிரவாத மாஃ அமைப்பினரின் தீவிரவாத தாக்குலுக்கு முகம் கொடுக்க முடியாமல் செய்வதறியாது திண்டாடுவதாகவும் இதாக்குதலால் உயிர் இழந்த முஸ்லிம்களின் எண்னிக்கையினை கணக்கிட்டு கூற முடியாதுள்ளதாகவும்’ தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல் ஆரம்பித்த பத்து நாட்களுக்குள் சுமாராக ஐம்பதாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற் கருத்தொன்று தெரிவிக்கின்றது.

கடந்த 28ம் திகதி எகிப்திய மக்கள் சபை உறுப்பினர் இஸ்மாயீல் தலமையில் ஒன்று திரண்ட எகிப்தியர்கள் எகிப்திய மியன்மார் தூதரகத்திற்கு முன்னால் இக்கொடூர தீவிரவாத தாக்குதலையும், மியன்மார் அரசாங்கம் இது விடயத்தில் மெளனமாக இருப்பதையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு இமியன்மார் அரசு கூடிய விரைவில் இதற்கான முடிவினை காண வேண்டும் எனவும்., தவறும் வேலையில் மியன்மார் தூதூவரை நாடுகடத்த வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

மியன்மாரின் மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 15 வீதமாகவும், அறைவாசி முஸ்லிம்கள் அராகான் மாகாணத்தில் வாழ்வதாகவும் புள்ளிக்கணிப்பு தெரிவிக்கின்றது.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

‘நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நன்மையான,இறையச்சம் ஊட்டக்கூடிய விடயங்களில் உதவி செய்து கொள்ளுங்கள்இபாவமான, விரோதத்தன்மையை உண்டுபண்ணக்கூடிய விடயங்களில் உதவி செய்ய வேண்டாம்’.

Published by

Leave a comment