வடக்கு துணுக்காய் நகர எழுச்சித்திட்டத்துக்கு 451 மி. ஒதுக்கீடு!

MMS

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்  நகர எழுச்சி திட்டதத்துக்கு  451 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாக  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டங்களுக்கென 2011ஆம் ஆண்டில் 130 மில்லியன் ரூபாவும் 2012 ஆம் ஆண்டுக் கென 200 மில்லியன் ரூபாவும் 2013 ஆம் ஆண்டுக்கென 121 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

துணுக்காய் ஐயன்குளம் சந்தை தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Published by

Leave a comment