விபத்தில் ஏறாவூர் இளைஞர் மரணம்

-MMS

நேற்று புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் பதுளை – கரடியனாறு வீதியில் இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில்  ஏறாவூரைச் சேர்ந்த 31 வயதான அஸனார் சனூஸ்  எனும் இளைஞர் மரணமானதாகவும் ,  காயங்களுக்குள்ளான நிலையில் மற்றுமொருவர்  கரடினாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் கரடியனாறு வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Published by

Leave a comment